Monday, April 9, 2012

ஸ்கூல் - 55 வார்த்தை சிறுகதை


எனக்கு இந்த ஸ்சூலுக்கு போறது கொஞ்சம் கூட பிடிக்கலை. பாடம், பரீட்சை இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டாலே எரிச்சலா வருது. நாள் முழுக்க நாலு சுவர்களுக்கு மத்தியிலே உட்கார முடியலே.

இன்னிக்கு அப்பாவிடம் இதைப் பத்தி பேசிடனும் என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றேன். அப்பா...எனக்கு ஸ்சூலுக்கு போகவே பிடிக்கலே. பேசாமே, இந்த டீச்சர் வேலையை ரிசைன் பண்ணிட்டு எனக்கு பிடிச்ச மாதிரி பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்.



4 comments:

மாசிலா said...

55 வார்த்தைகளில் அப்படி என்ன ஒரு கதையாக இருக்கும் என விருவிருப்புடன் படித்த அதே வேகத்தில், கதையின் கடைசியில் ஸ்கூலுக்கு போக அடம் பிடித்தவர் ஒரு டீச்சர் என்ற அந்தர் பல்டி ட்ரிக்ஸ் நல்ல நகைச்சுவையான யோசனைதான்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

Narayanan Narasingam said...

//@மாசிலா said...
55 வார்த்தைகளில் அப்படி என்ன ஒரு கதையாக இருக்கும் என விருவிருப்புடன் படித்த அதே வேகத்தில், கதையின் கடைசியில் ஸ்கூலுக்கு போக அடம் பிடித்தவர் ஒரு டீச்சர் என்ற அந்தர் பல்டி ட்ரிக்ஸ் நல்ல நகைச்சுவையான யோசனைதான்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.//

வாங்க மாசிலா,

அந்தர் பல்டி அடிப்பது தான் இது போன்ற சடன் பிக்க்ஷன் கதைகளின் ஸ்பெஷாலிடியே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா ஹா ! நல்ல கதை ! நன்றி நண்பரே !

Narayanan Narasingam said...

//@திண்டுக்கல் தனபாலன் said...ஹா ஹா ! நல்ல கதை ! நன்றி நண்பரே !//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...