Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Wednesday, September 7, 2011

USA -ல் CT அல்லது MA பகுதியில் வசிப்பவரா நீங்கள்...



USA -ல் CT அல்லது MA பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி. கனக்டிகட் தமிழ் சங்கத்தின் இருபதாவது ஆண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னிசையுடன் கொண்டாடும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

இசை சங்கமம் 2011, ஜெயா டிவி புகழ் ஹரியுடன் நான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்று கலக்க போகும் இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை அக்டோபர் 8 -ம் தேதி கனக்டிகட்டில் உள்ள  Glastonbury High School -ல் நடக்கவிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். 

http://www.cttamilsangam.org/images/Deepavali_Flyer_2011.pdf




Sunday, August 28, 2011

ஐரீன் அப்டேட் - புகைப்படங்களுடன்

ஐரீன் சூறாவளியின் சீற்றம் ஒரு வழியாக குறைந்தது. வடகிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் பலத்த வெள்ளம் ஏற்பட்டிருகிறது. இப்போது கனடா பார்டரை நோக்கி முன்னேறி இருக்கிறது. இதுவரை இருபத்தி மூன்று பேர் ஐரீனால் உயிரிழந்திருகிரார்கள் என்று தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஐரீன் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. சராசரியாக ஏழு இன்ச் மழை பொழிந்திருகிறது. ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துகொண்டிருகிறது, இது நாளை வரை தொடரும் என்று கூறுகிறார்கள். இன்னும் பல இடங்களில் பலத்த காற்று (சுமார் ஐம்பது மைல் வேகத்தில்) வீசிகொண்டிருகிறது. சுமார் நான்கு மில்லியன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி இருக்கின்றன. இவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வாரமோ அதற்கு மேலோ ஆகலாம். இங்கே கிழே உள்ள சில புகைப்படங்களும் மற்றும் காணொளி ஐரீனின் சீற்றத்தை விளக்கும்.










காணொளி:



Friday, August 26, 2011

ஐரீனு ஐயாம் நாட் லவ் யு


ஆடுகளம் படத்திலே தனுஷ் சொல்ற வசனம் மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா. என்ன பண்ண, இப்ப இங்கே இருக்குற சூழ்நிலையிலே அதை தான் சொல்ல முடியும் போல இருக்கிறது. அண்ணன் இப்ப குளிக்கிறார், அண்ணன் டிபன் சாப்பிடுறார், அண்ணன் கிளம்பிட்டார் என்று எதோ ஒரு படத்தில் லைவ் கமெண்ட்ரி கொடுப்பது போல அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிற சூறாவளி ஐரீன் பற்றி டிவியில் எந்த சேனல் போட்டாலும் பேசிக் கொண்டிருகிறார்கள். நார்த் கேரலினாவில் இருந்து மக்களை வழுக்கட்டாயமாக வெளியேற சொல்லிவிட்டார்கள். அடுத்தது எந்தெந்த பகுதியில் இருந்து மக்களை ஊரைவிட்டு கிளம்ப சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு மக்கள் வெளியே பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று கொண்டிருகிறார்கள். என்ன செல்வம் சேர்த்து என்ன, இயற்கையின் முன்னால் ஒரு கொம்பனும் நிற்க முடியாது என்பது தான் உண்மை. அதன் சீற்றத்தில் இருந்து விலகி தலை தெறிக்க ஓட மட்டுமே முயற்சிக்கலாம் என்பது தெரிகிறது. 

இப்படி நிலை இருக்கும்போது, மக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஈமெயில் மற்றும் டிவியிலும் எல்லா பயபுள்ளங்களும் போய் ஒழுங்கா சாப்பாடு, தண்ணி (ஹலோ, வெறும் குடிக்கிற தண்ணி தான், ஓவரா கற்பனை பண்ணாதீங்க) எல்லாம் வாங்கி வெச்சுகோங்க என்று ஓயாம சொல்லிட்டு இருக்காங்க. சரி இவ்வளவு சொல்றாங்க, அதுக்கு மரியாதையை கொடுத்தாவது நம்மளும் போய் எதாவது வாங்கி ஸ்டாக் பண்ணுவோம்னு கடைக்கு போனேன். அங்க போய் பாத்தா, ஆளாளுக்கு ஷாப்பிங் கார்ட்டை புல்லா நிறைச்சிட்டு இருந்தாங்க. என்னடா ஒரு வருஷத்துக்கு தேவையானதை வாங்குறாங்க போலன்னு நினைச்சுகிட்டேன். அவங்களை சொல்லியும் குத்தம் இல்லை. ஏன்னா, அமெரிக்காவில் சாதரணமாக கரண்ட் போகாது, ஆனால் அப்படி போனால், திரும்பி வர சில நேரங்களில் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அதனாலே பிரிட்ஜிலே வைக்க வேண்டிய அவசியம் இல்லாத சாப்பாட்டு ஐட்டங்களா வாங்கி குவிக்கிறாங்க. எந்த நேரத்திலே ஊரை விட்டு வேறே இடத்துக்கு போக சொல்லுவாங்கனு தெரியாமே, மக்கள் எல்லாம் காருக்கு பெட்ரோல் நிரப்பிகிட்டு இருக்காங்க. இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் -ல் இருந்து கீழே பூமியை பார்க்கும் அஸ்டிராநட்ஸ் கூட, இங்கே இருந்து பாக்கவே ரொம்ப பயங்கரமா தான் இருக்கு என்கிறார்களாம்.

ஐரீன் அடுத்த இரு நாட்களில் எந்த பக்கம் திரும்புவானு எல்லாரும் உன்னிப்பா பாத்துட்டு இருக்கோம். பாக்கலாம் ஒன்னும் பெரிசா பிரச்சனை இல்லாம ஐரீன் கரை கடந்தால் நன்றாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...