Showing posts with label உடனடிக்கதை. Show all posts
Showing posts with label உடனடிக்கதை. Show all posts

Saturday, May 9, 2015

மதர்ஸ் டே - 55 வார்த்தைகள் சிறுகதை


ஹேப்பி மதர்ஸ் டே என்று கூவியபடி கையில் கிப்டுடன் நுழைந்த மகன் அருண் தன்னிடம் பேசாமல் நேராக மனைவி ரேகா இருந்த அறைக்குள் சென்றதைப் பார்த்து திலகவதி சற்று விக்கித்து நின்றாள்.

ஏதோ புத்தகத்தில் மூழ்கி இருந்த கணவனிடம் என்னங்க இன்னிக்கு மதர்ஸ் டே, வாங்க உங்க அம்மாவைப் போய் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துரலாம் என்றாள்.

இத்தனை வருடம் இல்லாமல் என்ன இப்போ புதுசா என்று மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்காமல் உடனே கிளம்பினார் அவர்.


Tuesday, April 7, 2015

ரூல்ஸ்

லைப்ரரிலே படிச்சதும் புக்கை எடுத்த எடத்துலே வெக்க வேண்டாம்.

யாரும் ரூல்ஸை மதிக்கறதே இல்லே என்று பெரும் குரலெடுத்து கோபத்துடன் கத்திய லைப்ரரியனை படித்துக் கொண்டிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து பார்த்தனர்.

Wednesday, May 22, 2013

லிவிங் டுகெதர் - கி.பி. 2405




கல்யாணமே பண்ணிக்காம ரேகா கூட சந்தோசமா தானேம்மா இருக்கேன்.

இதெல்லாம் ஒரு வாழக்கையாடா. எனக்கும் பேரன் பேத்தி வேணும்னு ஆசை இருக்காதா.

குழந்தை பெத்துக்க மட்டும் தான் முடியாது.  பார்க்க அழகா இருக்கா, சொல்றதை கேக்குறா. அது போதும்.

இதெல்லாம் சரியில்லை. மொதல்ல இதை எங்கயாவது தொலைச்சிட்டு ஒரு நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணிட்டு வா.

இதைக் கேட்டு அப்படியே சரிந்த ரேகாவை பிடித்து அவள் இடுப்பின் பின்புறம் இணைந்திருந்த ஒயரை இழுத்து எலெக்ட்ரிக் பாயிண்டில் சொருகினான்.


பின் குறிப்பு: கதையை முட்டி மோதி ஐம்பைதைந்து வார்த்தைகளில் முடித்து விட்டேன். சில நேரங்களில் வார்த்தைகளைச் சுருக்கி விஷயத்தை சொல்வதற்கு நிறைய நேரம் பிடிக்கிறது. சுஜாதா அவர்கள் எல்லாவற்றையும் வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கூறுவார். அது போல அங்கங்கே ஹிண்ட்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


Friday, May 17, 2013

NRI மாப்பிள்ளை

NRI மாப்பிள்ளை - 55 வார்த்தை சிறுகதை 




ராஜம், அடுத்த வாரம் பட்டிமன்றத்திலே, இந்தியாவை சப்போர்ட் பண்ணி பேசப்போறேன் என்றார் சண்முகம்.

நோ, நோ, நீங்க வெளிநாட்டை தான் சப்போர்ட் பண்ணனும். நாம ரெண்டு தலைமுறையா இங்கே இருக்கோம். நம்ம குழந்தைங்களும் இங்கேதான் படிச்சு நல்ல வேலைக்கு போயிட்டு இருக்காங்க.

நீ சொல்றா மாதிரினா...

ஒரு நிமிஷம், இந்தியா கால் அண்ணாகிட்டேயிருந்து...

ஆமாண்ணா, ரிஷி கல்யாண விஷயம் பேசத்தான் காலைலே கூப்பிட்டிருந்தேன். நம்ம ஊருலேயே, நல்ல பொண்ணா பாருண்ணா. பாக்கறதுக்கு லட்சணமா, படிச்சு இருந்தாப் போதும்...


Friday, November 11, 2011

டமில் ஆசிரியர் - 55 வார்த்தை சிறுகதை


 
குமார் போன வாரம் நடத்தின திருக்குறளை சொல்லு பார்க்கலாம்.

இல்லே சார், தெரியாது. நான் போனவாரம் வரலே.

நீதான் யாரையாவது என்ன நடத்தினாங்கன்னு கேட்டு படிச்சிருக்கணும். மத்த பாடம் மாதிரி தமிழையும் நல்லாப் படிக்கலாம் இல்லே என்று கோபமாகக் கூறியபடி மேஜையின் மேல் ஒலித்த செல்போனை எடுத்தார்.

ஹலோ, சொல்லுங்க சார். மத்த டீச்சர்ஸ் எல்லாரும் கொடுத்துட்டாங்களா. ஊருக்கு போயிட்டு சண்டே தான் வந்தேன், எனக்கு தெரியவே தெரியாது. கண்டிப்பா நாளைக்கு மார்னிங் ரெடி பண்ணி கொடுத்துடுறேன்.

Wednesday, August 31, 2011

ஒரு பதிவரின் கதை


அலுவலகத்தில் இருந்து வந்து பைக்கை நிறுத்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரவியை பார்த்தேன்.

ஏண்டா ரவி, ஸ்கூல்லே இருந்து வந்ததுலே இருந்து விளையாட்டுதானா, கொஞ்சம் நேரம் வீட்டுலே உக்காந்து படிக்ககூடாதா என்று கத்தினேன்.

இதோ வரேன் டாடி, ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்...

சரி, சரி சீக்கிரம் வா என்றபடி உள்ளே சென்று, வழக்கம் போல சோபாவில் சாய்ந்து இன்று என்ன பதிவு எழுதலாம் என்று நினைத்துக்கொண்டே, லேப்டாப்பில் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.

பின் குறிப்பு: ஒரு சடன் பிக்க்ஷன் பாணியில் இந்த 55 வார்த்தை சிறுகதையை முயற்சித்திருக்கிறேன். அதனால் எல்லா விஷயங்களையும் விளக்காமல் உங்கள் கற்பனைக்கே விட்டிருக்கிறேன். 

Sunday, August 28, 2011

போர் - சிறுகதை



பீட்டர் விமானத்தில் இருந்து கீழே தெரிந்த எதிரிகள் மீது குண்டுகளை விடாமல் வீசிக்கொண்டிருந்தான். இன்னும் சிறிது தூரம் செல்லத்தான் எரிபொருள் இருந்தது. அதற்குள் எத்ரிகளை கொன்று குவித்து விட்டு அடுத்த இலக்கை அடைய வேண்டும். நடுநடுவில் வந்த பெரிய கட்டடங்கள் மீது குண்டுகளை வீசினான்.

கீழிருந்து எதிரிகள் தங்கள் பீரங்கிகளால் விமானத்தை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீசும் குண்டுகள் விமானத்தின் மீது பட்டுவிடாமல் வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.

திடீர் என்று விமானத்தின் பின்னால் இருந்து எதிரிகள் வீசிய குண்டு விமானத்தின் பின் பகுதியில் பட்டு, விமானம் நிலை தடுமாறி கிழே வேகமாக விழ ஆரம்பித்தது.

பீட்டர், அங்கே என்ன பண்றே. வீடியோ கேம் விளையாடியது போதும், சீக்கிரம் வந்து ஹோம் வொர்க் பண்ணு.


Saturday, August 27, 2011

மியுசியம் - 55 வார்த்தை சிறுகதை



இது ஒரு Sudden Fiction வகை கதை. இதை சுஜாதா அவர்கள் உடனடிக்கதை என்று குறிப்பிடுவார். உடனடிக்கதைகள் எளிமையானவை. கதை எழுதுபவனுக்கு சம்பவங்களும் கதாபாத்திரங்களும் நன்றாக தெரியும். ஆனால், எல்லாவற்றையும் வாசகர்களுக்கு காட்ட மாட்டான். ஒரு பகுதியை மட்டும் காட்டி மற்றவற்றை வாசகரை உணர வைப்பான். உடனடிக்கதைகள் 55 வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டும் என்ற நியதி இல்லாவிட்டாலும், இங்கு 55 வார்த்தைகளில் ஒரு உடனடிக்கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறேன். இனி கதைக்கு போகலாம்.


---------------------------------


சரி, சரி, சீக்கிரம் கிளம்புங்க. லேட்டா போனா உள்ளே அனுமதிக்கமாட்டாங்க.

ஒரு நிமஷங்க, இதோ கிளம்பிட்டோம்.

சில நிமிடங்களில் அனைவரும் கிளம்பி வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், அது சட்டேன்று வேகம் எடுத்தது.

சில மணிநேர பயணத்திற்கு பின் , புவிஈர்ப்பு விசையை லேசாக உணர ஆரம்பித்த சில நிமிடங்களில் ஜிவ்வென்று சென்று பூமியில் தரை இறங்கியது.

சுவாசிக்க மாஸ்க் போட்ட பின்னர் கீழிறங்கி, குழந்தைகளிடம் - இது தான் பூமி, நம்மோட மூதாதையர்கள் எல்லாம் இங்கே தான் வாழ்ந்தாங்க என்றேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...