Showing posts with label கவிதை (மாதிரி). Show all posts
Showing posts with label கவிதை (மாதிரி). Show all posts

Friday, January 3, 2014

மனம்

விரும்பியவர் இழைத்த பெரும் தவறையும்
வினாடியில் மறக்கும் மனதின் முன்
விருப்பம் அல்லாதாரின் சிறு தவறும்
பெரும் குரலெடுத்து ஒலிப்பது ஏன் ?
மனம் என்ன ஒரு குரங்கா ?
இல்லை மரக்கிழைகள் தாவும் குரங்கும்
உறவுக்கிழைகள் முறிக்கும் மனித மனமும்
ஒன்றல்ல.



 

Sunday, July 28, 2013

பருவம்



மகளுடம் சேர்ந்து சாலையில் நடக்கும் நேரத்தில்
அடிக்கடி திரும்பிப் பார்க்கும் சாலையோரத்து இளைஞர்கள்
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை உணர்த்துகிறார்கள்.




Saturday, September 10, 2011

வாழ்க்கை



சுகமாக இருக்கையில் சாய்ந்தமர்ந்து
ஐம்பது இன்ச் டிவியில் ஆங்கிலப்படம்,

மாலை சிற்றுண்டி விழுங்கி
சூடான காபியை ரசித்து குடித்து,

காரில் ஏறி அமர்ந்து
ஏ.சி. போதாமல் சற்றே கூட்டி,

வெளிச்சத்தம் கேட்காமல் இருக்க
இசையின் ஒலியைச் சற்று அதிகப்படுத்தி,

மிதமான வேகத்தில் செல்லும்போது
கண்ணில் பட்டது அந்த காட்சி,

சாலையோரத்தில் தாயின் மடியில்
பசியால் கதறும் குழந்தைக்கு பின்னே,

தலைவர் படத்தின் ரிலீஸ்-போஸ்டர்
மனதில் ஒரு உற்சாக சிலிர்ப்பு,

எவ்வளவு செலவானாலும் சரி
முதல் நாளே பார்த்துவிட வேண்டும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...