Sunday, July 28, 2013

வைகோவை சந்தித்தேன்


சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில் திரு. வைகோ அவர்கள் நான் அமர்ந்திருந்த வரிசைக்கு அருகில் உள்ள வரிசையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் வைகோ தான் என்று தெரிந்தாலும், வேறு யாராவதாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. ஏற்கனேவே சமீபத்தில் மும்பையில் நம்ம கொலைவெறி புகழ் அனிருத் போல ஒருவரைப் பார்த்து நீங்கள் அனிருத் தானே என்று கேட்டு பல்பு வாங்கி இருந்தது நினைவிற்கு வந்ததால் அமைதியாக இருக்கையில் உட்கார்ந்து விட்டேன். அவர் எதோ நெல்சன் மண்டேலா பற்றிய புத்தகத்தைப் படித்தபடி இருந்தார். விமானம் தரை இறங்கியதும் ஒரு சிலர் அவருக்கு வணக்கம் கூறியதைப் பார்த்ததும், அவர் வைகோ தான் என்று ஊர்ஜிதப்படுத்திகொண்டேன். இதுவரை எந்த பிரபலத்தையும் இவ்வளவு அருகில் பார்த்திராத காரணத்தினால் அருகில் சென்று பேச சற்று தயக்கமும் பயமுமாக இருந்தது. சற்று தயங்கியபடி அவர் அருகில் சென்று வணக்கம் கூறியதும், அவரே சரளமாக பெயர் என்ன, எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார். நான் பாஸ்டனில் இருந்து விடுமுறைக்கு வந்திருக்கிறேன் என்று கூறியதும் பாஸ்டனை பற்றிய வரலாற்று சிறப்புகளைப் பற்றி பேசினார். சிறிது நேரம் பேசிய பின்னர் புகைப்படம் எடுத்துகொண்டு, என் கையில் இருந்த ஒரு புதிய புத்தகத்தில் அவர் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். மனித நேயமே உயர்வு என்று கையெழுத்திட்டு கொடுத்தார். பிரபலமான மனிதர்களை அருகில் பார்க்கும் போது சற்று பதட்டம் ஏற்பட்டாலும், அருகில் சென்றால் பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.




1 comment:

சாய்ரோஸ் said...

உண்மையிலேயே வைகோ ஒரு அற்புத மனிதர்தான்... ஆனால் அரசியல் வட்டத்துக்குள் சுழன்று வீணாகிப்போனார் என்றே சொல்லலாம்... உங்களது அனுபவத்தை பகிர்ந்தது மிகச்சிறப்பு...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...