Saturday, May 9, 2015

மதர்ஸ் டே - 55 வார்த்தைகள் சிறுகதை


ஹேப்பி மதர்ஸ் டே என்று கூவியபடி கையில் கிப்டுடன் நுழைந்த மகன் அருண் தன்னிடம் பேசாமல் நேராக மனைவி ரேகா இருந்த அறைக்குள் சென்றதைப் பார்த்து திலகவதி சற்று விக்கித்து நின்றாள்.

ஏதோ புத்தகத்தில் மூழ்கி இருந்த கணவனிடம் என்னங்க இன்னிக்கு மதர்ஸ் டே, வாங்க உங்க அம்மாவைப் போய் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துரலாம் என்றாள்.

இத்தனை வருடம் இல்லாமல் என்ன இப்போ புதுசா என்று மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்காமல் உடனே கிளம்பினார் அவர்.


No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...