Saturday, December 31, 2011

ஓட்டம் - ஐம்பத்தைந்து வார்த்தை சிறுகதை



காலை ஆறு மணி. அர்ஜுன் அவசரமாக எழுந்து கடிகாரத்தின் தலையைத் தட்டி அலாரத்தை நிறுத்தினான். நிமிடத்தில் கிளம்பி டிராக் சூட்டை எடுத்து மாட்டினான்.

டைனிங் மேஜை மீது காபி ரெடியாக இருந்தது.

போர்டிகோவில் வந்து காரை கிளப்பி, சரியாக ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த கட்டடத்தின் வாசலில் நிறுத்தி உள்ளே சென்றான்.

அங்கு உடற்பயிற்சி செய்பவர்களை பார்த்தபடி, ட்ரெட்மில்லில் ஏறி இனிமேல் தினமும் ஜிம்முக்கு வந்து அரைமணி நேரமாவது ஓடவேண்டும் என்று மனதிற்குள் கூறியபடி ஓட்டத்தை துவக்கினான்.


பின் குறிப்பு:

உங்களில் பலருக்கு இந்தக் கதையில் நான் சொல்லவந்தது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் மேலும் சில வார்த்தைகளை சேர்த்து, அர்ஜுன் செய்ததை நியாயப்படுத்த என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது. உங்களிடம் வேறு எதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்.


No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...