Friday, August 12, 2011

பக்கோடா - சிறுகதை (சைதாபேட்டை நினைவுகள்)



டேய் இன்னாடா அது பையிலே தூக்கினு போறே என்று கேட்ட பக்கத்துக்கு வீட்டு ரகு அம்மாவை சற்று எரிச்சலுடன் பார்த்தேன். இதுக்கு வேறே வேலையே இல்லியா நம்மளை நோட்டம் விடுறது தான் இதுக்கு முக்கிய வேலை என்று நினைத்து கொண்டாலும் அதை வெளியே காட்டிகொள்ளாமல் பதில் கூறினேன்.
அது ஒன்னும் இல்லீங்க, முருகர் கோவிலுக்கு எதுர்க பக்கோடா கடை இருக்குதில்லே, அங்கே பக்கோடா, மிச்சர் போட்டு குடுக்க இந்த மாறி கவர் செஞ்சு குடுத்தா, நூறு கவருக்கு 75 காசு குடுப்பாங்க. அதான் வூட்டுல இருந்த பழைய பேப்பர்லே கவர் செஞ்சு எடுத்துனு போறேன் என்றேன்.

ஏய், உனுக்கு ஏண்டா இந்த தேவல்லாத வேலை, படீக்ரத வுட்டுட்டு, இரு இரு உங்க அம்மா கைலே சொல்றேன். இந்த பக்கோடா கடைக்காரன் இப்பிடி கவர் செஞ்சு குடுத்தா துட்டு குடுப்பானு இவ்ளோ நாள் எனுக்கு தெரியாம போச்சே, இரு அவனை இப்பமே போய் இன்னான்னு கேக்குறேன்.

சர்தான், இதுக்கும் வெச்சுதா ஆப்பு, எதோ கவர் வித்து கொஞ்சம் மூசுண்ட வாங்கி துன்னலாம்னு பாத்தா அத்த போய் இது கெடுக்குதே என்று மனதில் நினைதுகொண்டதை  வெளியில் காட்டாமல், ஐயோ வேணாங்க இந்த ஒரு தபா மட்டும் தாங்க, இனிமேல் பண்ண மாட்டேன், அம்மா கைலே சொல்லாதீங்க என்று கெஞ்சினேன்.

செரி, செரி சொல்லலே, அந்த பைய என் கைலே குடுத்துட்டு நீ போய் படீக்ற வேலைய பாரு. இன்னொரு தபா இத்த செஞ்சே அவ்ளோதான், அக்காங்...என்று பெரிய மகராணி தோரணையில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரகு அம்மா.

சில மணி நேரம் வீட்டில் உட்கார்ந்து ஏதேதோ செய்து கொண்டிருந்த நான், பின்னர் போரடிகுதே, ரகுவை கூப்பிட்டு எதாவது வெளையாடலாம என்று நினைத்து கொண்டிருந்தபோது  டிரௌசர் பாக்கட்டில் வைத்திருந்த கோலிக்குண்டுகள்  சலசலத்தது.

ரகு வீடு வாசலில் நின்று குரல் கொடுத்தேன், டேய் ரகு, வரியாட கொஞ்ச நேரம் ராஜா டோனி வெள்ளாடலாம்.

கொஞ்சம் உள்ளே வந்து உக்காருடா, எங்க அம்மா ஒரு வேலை கொடுதிருகுறாங்க, அத்த முட்சிடு வரேன் என்றான் ரகு.

நான் உள்ளே நுழைந்து பார்த்தபின் அதிர்ச்சில் ஒரு கணம் தடுமாறிவிட்டேன். ரகு, அவன் அக்கா, அண்ணன் என குடும்பமே பக்கோடா கட்ட கவர் செய்துகொண்டிருந்தது.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...