Friday, August 26, 2011

ஐரீனு ஐயாம் நாட் லவ் யு


ஆடுகளம் படத்திலே தனுஷ் சொல்ற வசனம் மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா. என்ன பண்ண, இப்ப இங்கே இருக்குற சூழ்நிலையிலே அதை தான் சொல்ல முடியும் போல இருக்கிறது. அண்ணன் இப்ப குளிக்கிறார், அண்ணன் டிபன் சாப்பிடுறார், அண்ணன் கிளம்பிட்டார் என்று எதோ ஒரு படத்தில் லைவ் கமெண்ட்ரி கொடுப்பது போல அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிற சூறாவளி ஐரீன் பற்றி டிவியில் எந்த சேனல் போட்டாலும் பேசிக் கொண்டிருகிறார்கள். நார்த் கேரலினாவில் இருந்து மக்களை வழுக்கட்டாயமாக வெளியேற சொல்லிவிட்டார்கள். அடுத்தது எந்தெந்த பகுதியில் இருந்து மக்களை ஊரைவிட்டு கிளம்ப சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு மக்கள் வெளியே பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று கொண்டிருகிறார்கள். என்ன செல்வம் சேர்த்து என்ன, இயற்கையின் முன்னால் ஒரு கொம்பனும் நிற்க முடியாது என்பது தான் உண்மை. அதன் சீற்றத்தில் இருந்து விலகி தலை தெறிக்க ஓட மட்டுமே முயற்சிக்கலாம் என்பது தெரிகிறது. 

இப்படி நிலை இருக்கும்போது, மக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஈமெயில் மற்றும் டிவியிலும் எல்லா பயபுள்ளங்களும் போய் ஒழுங்கா சாப்பாடு, தண்ணி (ஹலோ, வெறும் குடிக்கிற தண்ணி தான், ஓவரா கற்பனை பண்ணாதீங்க) எல்லாம் வாங்கி வெச்சுகோங்க என்று ஓயாம சொல்லிட்டு இருக்காங்க. சரி இவ்வளவு சொல்றாங்க, அதுக்கு மரியாதையை கொடுத்தாவது நம்மளும் போய் எதாவது வாங்கி ஸ்டாக் பண்ணுவோம்னு கடைக்கு போனேன். அங்க போய் பாத்தா, ஆளாளுக்கு ஷாப்பிங் கார்ட்டை புல்லா நிறைச்சிட்டு இருந்தாங்க. என்னடா ஒரு வருஷத்துக்கு தேவையானதை வாங்குறாங்க போலன்னு நினைச்சுகிட்டேன். அவங்களை சொல்லியும் குத்தம் இல்லை. ஏன்னா, அமெரிக்காவில் சாதரணமாக கரண்ட் போகாது, ஆனால் அப்படி போனால், திரும்பி வர சில நேரங்களில் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அதனாலே பிரிட்ஜிலே வைக்க வேண்டிய அவசியம் இல்லாத சாப்பாட்டு ஐட்டங்களா வாங்கி குவிக்கிறாங்க. எந்த நேரத்திலே ஊரை விட்டு வேறே இடத்துக்கு போக சொல்லுவாங்கனு தெரியாமே, மக்கள் எல்லாம் காருக்கு பெட்ரோல் நிரப்பிகிட்டு இருக்காங்க. இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் -ல் இருந்து கீழே பூமியை பார்க்கும் அஸ்டிராநட்ஸ் கூட, இங்கே இருந்து பாக்கவே ரொம்ப பயங்கரமா தான் இருக்கு என்கிறார்களாம்.

ஐரீன் அடுத்த இரு நாட்களில் எந்த பக்கம் திரும்புவானு எல்லாரும் உன்னிப்பா பாத்துட்டு இருக்கோம். பாக்கலாம் ஒன்னும் பெரிசா பிரச்சனை இல்லாம ஐரீன் கரை கடந்தால் நன்றாக இருக்கும்.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

புயலானால் கூட அதை ஐ கேட் யூ எனச்
சொல்லாமல் நாட் லவ் யூ என தலைப்பிட்டதைப்
பார்த்து வியந்து போனேன்
அமெரிக்கர்கள் புயல் போன்ற சமயங்களில் ஒரு
நல்ல சமூக மனிதனாக நடந்து கொள்வதைப் பார்த்து
பலசமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்
அது தொடர்பாக தாங்கள் அங்கே நேரடியாக
அனைத்தையும் பார்ப்பதால் அது குறித்து
விரிவான பதிவிடலாமே

Narayanan Narasingam said...

//@Ramani said...
புயலானால் கூட அதை ஐ கேட் யூ எனச்
சொல்லாமல் நாட் லவ் யூ என தலைப்பிட்டதைப்
பார்த்து வியந்து போனேன்...//

வாங்க ரமணி ஐயா.

ஐரீனு ஐயாம் லவ் யு என்பது ஆடுகளம் படத்தில் தனுஷ் தப்பு தப்பாக ஆங்கிலத்தில் பேசும் ஒரு வசனம். அதே போல இருக்க வேண்டும் என்பதற்காக நாட் லவ் யூ என்று தலைப்பு வைத்தேன்.

சில நேரங்களில் மீடியா விஷயத்தை பயங்கரமாக பெரிது படுத்தி விடுவார்கள். அவர்களிடம் பல டெக்னிகல் சமாச்சாரங்கள் இருப்பதால், புயல் எப்படி எந்த திசையில் எத்தனை மணிக்கு வரும் என்று புட்டு புட்டு வைப்பார்கள். ஆனால் பல நேரங்களில், இதை எல்லாவற்றையும் பொய்யாக்கிவிட்டு அது பாட்டுக்கு வேறு திசையில் சென்று கொண்டிருக்கும். இந்த முறை அவ்வாறு நிகழாது என்று ஏறக்குறைய சத்தியமே செய்கிறார்கள்.

அமெரிக்கா அரசாங்கத்தை பொறுத்தவரை, இது போன்ற இயற்கை நேரத்தில் உயிர் சேதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள மிகுந்த அக்கறை கொள்கிறார்கள். நாங்கள் ஊரை விட்டு வெளியேற சொல்லியும் நீங்கள் வெளியேறவில்லை என்றால் எந்த ஒரு உதவி கேட்டும் 911-க்கு போன் செய்தால், புயல் அடங்கிய பின்னரே உதவி கிடைக்கும் என்று கறாராக கூறுகின்றார்கள். (911 என்பது கிட்டதட்ட நம்ம ஊரு 100 மாதிரி, ஆனால் எல்லாவித அவசர உதவிக்கும் அழைக்கலாம்)

முடிந்தவரை, நான் பார்ப்பதை விரிவாக எழுத முயற்சிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

இயற்கையின் முன்னால் ஒரு கொம்பனும் நிற்க முடியாது என்பது தான் உண்மை.

சரியாச் சொன்னீங்க நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் நண்பா...

இயற்கைக்கும் மனிதனுக்குமான 20/20

பார்க..

http://gunathamizh.blogspot.com/2010/04/20-20.html

Narayanan Narasingam said...

//@முனைவர்.இரா.குணசீலன் said...//

வாங்க குணசீலன். இயற்கையின் போக்கை அறிந்து விலகி செல்ல மட்டுமே தொழில்நுட்பம் உதவுகிறது. இந்த பேரண்டத்தின் முன் பூமியே ஒரு சிறிய தூசி தான், அதில் வாழும் மனிதன் எம்மாத்திரம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Narayanan Narasingam said...

//முனைவர்.இரா.குணசீலன் said...அன்பின் நண்பா...இயற்கைக்கும் மனிதனுக்குமான 20/20 //

நல்ல பதிவு குணசீலன்.

பூமியின் வளங்களை இப்படி மனிதன் அழித்துக்கொண்டே சென்றால் வருங்கால சந்ததியினர் வாழ வேறு கிரகம் தேட வேண்டியதுதான்.

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மைதான் நண்பா..
தங்கள் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றிகள்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...