Friday, August 26, 2011

உங்க பிரெண்ட்ஸ் இந்த லிஸ்ட்லே இருக்காங்களா ?



பேஸ்புக் அக்கௌன்ட்லே இருநூறு முன்னூறு பிரண்ட்ஸ் வெச்சு இருக்கறவங்களை பார்த்தா ஆச்சரியமா இருக்கும். எப்படி இத்தனை பேரை நியாபகம் வெச்சு அவங்க கூட பழகுறாங்கன்னு. இந்த மாதிரி சோசியல் நெட்வொர்கிங் வெப்சைட்லே அம்பது பேருக்கு மேலே பிராக்டிகலா பராமரிக்கறது ரொம்ப கஷ்டம்னு ஏதோ ஒரு ஆர்டிகல் படிச்சேன். சரி இந்த பதிவு பேஸ்புக் பத்தி இல்லை. இப்போ விஷயத்திற்கு வரேன். எல்லோருக்கும் பிரண்ட்ஸ் இருப்பாங்க. ஒவ்வொரு ப்ரெண்டும் ஒவ்வொரு ரகம். அப்பிடி இருக்குற வித விதமான பிரண்ட்ஸ் டைப் பத்தி என்னோட அனுபவத்துலே தெரிஞ்சதை இங்கே பகிர்ந்துக்குறேன்.

டிஸ்கி: இதை மத்தவங்களை குத்தம் சொல்றா மாதிரி பாக்காதீங்க. எல்லார் கிட்டேயும் நிறை குறைகள் இருக்கு. நம்ம நண்பர்கள் கிட்டே குறைன்னு நாம நினைப்பதை, எடுத்து சொல்லலாம் இல்லேன்னா அந்த ஏரியாவை மட்டும் அவாய்ட் பண்றது நல்லது. எனக்கு தெரிஞ்ச பிரண்ட்ஸ் வகைகளை இங்கே வரிசைப்படுத்தி இருக்கேன். இந்த வகையில் சில நேரங்களில் நானும் இருப்பேன். சும்மா ஜாலியா எடுத்துட்டு, உங்களோட அனுபவத்தையும் சொல்லுங்க. 


பொசசிவ் பொன்னுமணி / பொன்னமா:

இவங்க எப்படினா, நாம இவங்க கிட்டே மட்டும்தான் பிரெண்டா இருக்கணும்னு நினைப்பாங்க. மத்த யார் கிட்டேயும் பழகினா இவங்களுக்கு பிடிக்காது. அப்பிடி பழகினாலும் இவங்களையும் கூட்டு சேத்துகிட்டா ஓகே, இல்லேனா ஒரு வழியாக்கிடுவாங்க. அதே சமயம் இவங்க நம்மளை தவிர்த்துட்டு நிறைய பேர் கிட்டே பழகுவாங்க, அதை நாம ஒன்னும் கேட்க கூடாது.

திடீர் தங்கப்பன் / தங்கம்மா:

இவங்க ஆரம்பத்தில நல்லா பழகுற மாதிரி இருக்கும். அப்புறம் சில நாட்கள் கழிச்சு தான் அவங்க சுயரூபம் ஓரளவுக்கு புரியும். திடீர்னு காரணமே இல்லாம நம்மளை கண்டுக்க மாட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு நாள் திடீர்னு பாசமழை பொழிவாங்க. நம்மளாலே இன்னும் ஒரு மாசம் கழிச்சு ஏதாவது வேலை ஆகணும்னா, இன்னிக்கே பிட்டை போட ஆரம்பிச்சுருவாங்க. இதுலே இன்னொரு விஷயம் என்னனா, சில நேரங்கள்லே இந்த மாதிரி இடைவெளி விட்டு பேச ஆரம்பிக்கும் போது,  என்ன நீங்க எங்க கூட எல்லாம் பேசறதே இல்லேன்னு நம்ம மேலேயே பழியை தூக்கி போட்டு நம்மளை ஒரு நிமிஷம் கண்புயுஸ் பண்ணிருவாங்க.

போட்டு கொடுக்கும் பொன்னம்பலம் / பொன்னாத்தா:

இவங்க எப்படினா, யாரையாவது பத்தி தப்பா ஒரு வார்த்தை நம்ம கிட்டே எடுத்து விடுவாங்க. நம்மளும் உணர்ச்சிவசப்பட்டு ஆமாம் கரெக்டு, அவங்க சரியில்லை என்று ஓவரா கொட்டிவிட்டோம் என்றால் அவ்வளவு தான். அடுத்த நாளே அந்த விஷயம் நாம் யாரை குறை கூறி பேசினோமோ அவர்கள் காதுக்கு சென்றடையும்.

பா(யா)ச மணி:

சூப்பர்ஸ்டார் நடிச்ச வள்ளி படத்தை பார்த்தவங்களுக்கு இந்த கேரக்டர் ஈசியா புரியும். அதிலே பயில்வான் ரங்கசாமி ஒரு கூட்டத்தோட மரத்தடியிலே உக்காந்து பேசிட்டு இருப்பார். பேசிட்டு இருந்ததிலே, யாராவது ஒருத்தன் எழுந்து போனா, அவனை பத்தி கேவலமா பேசுவார். அதே டைப் ஆளுங்க நிறைய பேரு நாட்டுலே இருக்காங்க. நம்மளை பத்தி மத்தவங்க கிட்டே தப்பா பேசுவாங்க, நம்மளை நேர்ல பாத்தா, வாயிலையே பாயசம் வைப்பாங்க.

தங்கமணி பிரியன்:

இவர் எப்படினா தன் மனைவி யார்கிட்டே பழக சொல்றாங்களோ அவங்க கிட்டே மட்டும் தான் பேசுவாரு, பழகுவாரு. பல நாள் பழகினவரா இருந்தாலும், பெண்களுக்குள்ளே ஒரு பிரச்சனைனா, இவர் அந்த நட்பை முறித்து கொள்வார். (நான் இப்படி கிடையாது...ஹி ஹி...)

பல்டி பரந்தாமன்:

பல வருடங்களுக்கு முன்னர் படித்த ஜோக்:

அவர்: என்ன சார், குழந்தைய கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க ?
இவர்: கோர்ட்லே சாட்சிகள் எல்லாம் பல்டி அடிக்கிறாங்கன்னு பேப்பர்லே பாத்தேன், அதான் காட்டிட்டு போகலாம்னு வந்தேன்.

பல்டி பரந்தாமன் எப்படினா, எதாவது ஒரு விஷயத்திற்கு முதலில் சரி என்று தலையாட்டுவார். பின்னர் அவர் மனைவி வேண்டாம் என்று சொன்னால் அப்படியே பல்டி அடித்து வேண்டாம் என்று சொல்லிவிடுவார். உதாரணதிற்கு ஒரு சிறிய கதை இங்கே...

பரந்தாமனிடம் அவர் நண்பர் ஒருவர், அண்ணே, வரீங்களா, வேலூர்லே ஒரு வேலை இருக்கு, போயிட்டு வரலாம். எவ்வளவு நேரம்ணே ஆகும் போய்ட்டு வர்றதுக்கு...

அதுக்கு என்னடா, வரேன். இங்கே இருந்து பாரிஸ் கார்னர் போக ஒரு அரைமணி நேரம். அங்கே இருந்து பாயிண்ட் டு பாயிண்ட் பிடிச்சா மூணு மணி நேரத்துலே வேலூர். வேலையை முடிஞ்சதும், சாப்பிட்டிட்டு கிளம்பினா சாயங்காலம் ஐஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துரலாம்.

இதற்குள் பரந்தாமனின் மனைவி - என்னங்க கொஞ்சம் இங்கே உள்ளே வாங்க - உள்ளே சென்ற பரந்தாமனிடம், கிசிகிசுப்பாக, உங்களுக்கு வேறே வேலையே இல்லேன்னு நினைப்பா, இப்போ ஒன்னும் வேலூர்க்கு போக வேண்டாம். ஒழுங்கா வீட்டுல இருங்க.

பரந்தாமன் வெளியே வந்து, அது...வந்து...இந்த வேலூர்க்கு இன்னிக்கே போகணுமாடா...இப்பவே மணி எட்டரை ஆச்சு, இன்னும் குளிச்சு, சாப்பிட்டிட்டு கிளம்பி பஸ் ஸ்டான்ட் போய், பஸ் பிடிச்சி பாரிஸ் கார்னர் போக எப்படியும் பதினொன்னு ஆகிடும். அங்கே இருந்து பாயிண்ட் டு பாயிண்ட் பிடிச்சாலும், எப்படியும் சாப்பாடுக்கு, அரை மணிநேரம் போடுவான். நாம அங்கே போய் சேரவே மணி மூணு ஆகிடும். அதுக்கப்புறம் உன்னோட வேலைய முடிச்சுட்டு கிளம்பி வர நைட் பதினோரு மணி ஆகிடும். இன்னொரு நாள் பாத்துக்கலாமே என்றார்.

இன்னும் நிறைய டைப் இதை போல சொல்லிகொண்டே போகலாம். உங்கள் அனுபவத்தில் இதை போல பிரண்ட்ஸ் டைப் இருந்தால் பின்னூட்டத்தில் எடுத்து விடுங்கள். 

4 comments:

Unknown said...

நல்ல ஆராய்ச்சி:))))உண்மையும் கூட.சில பேர் மறைமுகமாக நக்கல் செய்வார்கள்,வெவ்வேறு வகைகளில்.

Narayanan Narasingam said...

//@R.Elan//

வாங்க Elan, கரெக்ட் தான். மறைமுகமாக நக்கல் செய்கிற பார்டிகள் இருக்கவே செய்கிறார்கள்.

ஆனாலும் இதை ஆராய்ச்சின்னு சொல்றதுக்கு எல்லாம் பெரிய மனசு வேணும் -:) (just kidding...)

வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி

rajamelaiyur said...

Wow super article

Narayanan Narasingam said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...//வாங்க ராஜா.

வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...