Thursday, May 16, 2013

ப்ளீஸ்...இந்தப் பதிவை படிக்காதீங்க (கோபிநாத் பத்தி எதுவும் இல்லே)



ப்ளீஸ்...இந்தப் பதிவை படிக்காதீங்க. இந்த மாதிரியே ஒரு தலைப்பு வெச்சு கோபிநாத் எழுதிய ஒரு புக் பல ஆயிரம் பிரதிகள் வித்து இருக்காம். மாங்கு மாங்குன்னு உக்காந்து எழுதுவதற்கெல்லாம் வராத ஆதரவு, கோபிநாத்தை பற்றி கொஞ்சமே கொஞ்சம் எழுதி தலைப்பில் மட்டும் கோபிநாத்தை போட்டதும் வந்த ஹிட்சை பார்த்து இப்படி ஒரு தலைப்பை வைக்கவில்லை என்ற உண்மையை கூறிக்கொள்கிறேன். மத்தபடி இதுக்கும் கோபிநாதுக்கும் எந்த சம்பதமும் கிடையாது ஹி...ஹி...

ஆரம்பிப்பதற்கு முன்னாடி இப்பவே சொல்லிடுறேன். இந்த பதிவுலே எந்த உருப்பிடியான விஷயமும் கிடையாது. ஆமா மத்த பதிவுகளில் மட்டும் என்னத்த உருப்புடியா எழுதிட்டே என நீங்க மைண்ட் வாய்சில் கேட்கறது எனக்கு புரியுது. உங்களுக்கு முக்கியமான வேலை எதாவது இருந்தா இன்னும் ஒரு ரெண்டு வரி மட்டும் படிச்சிட்டு,  போய் அந்த முக்கியமான வேலையைப் பாருங்க.  இப்ப இதைப் படிக்காம போகணும்னு நினைக்குறங்களுக்கு மட்டும் ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன். நீங்க தாராளமா இந்த பேஜை க்ளோஸ் பண்ணிட்டு போகலாம். ஹலோ ஹலோ, எங்கே போறீங்க. வந்தது தான் வந்துடீங்க ஒரு ஐஞ்சு நிமிஷம் பொறுமையா படிச்சுட்டு போங்க ப்ளீஸ். அது தானே ஒலக நியாயம்.  சரி இனி என்ன சொல்ல வரேன்னு பாக்கலாம்.

சில நேரங்களில் யாராவது நம்மை கடுப்பேற்றுகிற மாதிரி கேள்வி கேட்பார்கள் அல்லது நடந்துக்கொள்வார்கள். ஆனால் நாகரீகம் கருதி நாம் சொல்ல நினைப்பதை சொல்லாமல் வேறு எதையாவது பேசி எஸ்கேப் ஆவோம். அப்பிடிப்பட்ட புண்ணியவான்களைப் பற்றிதான் இங்கு உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். இதெல்லாம் சொல்ற நம்மளும் ஞானி இல்லை, இந்த லிஸ்ட் நமக்கும் பொருந்தும் என்ற உண்மை சுட்டாலும் கூட நாம நினைப்பதை நாலு பேருக்கிட்டே சொல்றது தானே நியாயம். இதோ உண்மையிலேயே விஷயத்திற்கு வந்துட்டேன்.

ஒரு விஷயத்தை செய்வதற்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியில் வந்து நம்மிடம் இதை செய்யலாம்னு இருக்கேன், ஏதும் பிரச்சனை வராது இல்லை என்று சிலர் கேட்பார்கள். கவுண்டமணி சூரியன் படத்தில் சொல்வது போல 'நாம என்ன வக்கீலா கோர்ட்டா', இதுக்கெல்லாம் தீர்ப்பு சொல்வதற்கு என்று மனதிற்குள் தோன்றினாலும், அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை என்று சொல்லிவிடுவேன். அந்த பதிலைத் தான் அவர்களும் எதிர்பார்பார்கள். இவர்களிடம் அதெல்லாம் வேண்டாம், உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறினாலும் அதை அவர்கள் கேட்கப்போவது இல்லை. அப்புறம் ஏன் மெனக்கெட்டு நம்ம அட்வைஸ் பண்ணனும். 

அதே மாதிரி, சப்போஸ் நாம் எடுத்து செய்த ஒரு விஷயம் ஓன்று சரியா ஒர்க்கவுட்ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே நான் அப்பவே சொன்னேன் நியாபகம் இருக்கா, இது சரியா வராதுன்னு என்று நீட்டி முழக்குபவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவு ஸ்டிராங்கா எல்லாம் சொல்லி இருந்ததா நமக்கு நினைவே இருக்காது. அப்படி கண்டிப்பா சரியா வராதுன்னு நினைசிருந்தாங்க என்றால் உடனே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டியது தானே. ஒன்னு நாம அதை பண்ணி இருக்க மாட்டோம், அப்பிடியே பண்ணி இருந்தாலும் இவர் தடுத்தார் அதையும் மீறி செய்தோம் என்பது கண்டிப்பா நினைவில் இருக்கும். இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் என்ன பாஸ் பண்றது ?

இன்னொரு டைப் ஆளுங்க. நீங்க எல்லாம் பெரிய ஆளு, எங்க கிட்டே எல்லாம் பேச மாட்டீங்க ஒரு போன் கூட கிடையாது என்று கூறுபவர்கள். அதை நம்ம கிட்டே கூட நேர்லே சொன்னா பரவால்லே, வேற யார் கிட்டே சொன்னா அந்த விஷயம் நாம காதுக்கு வரும்னு நினைகிறாங்களோ அவங்க கிட்டே சொல்றது. அப்படி யார் கிட்டே சொன்னாங்களோ அந்த ஆளும் அடிக்கடி நம்ம கிட்டே பேசி வெக்குற ஆளு கிடையாது. ஆனா இந்த மாதிரி பத்த வெக்குற விஷயம் என்றால் தான் உடனே சந்திர மண்டலமா இருந்தாலும் போனை போடுவாங்களே. நான் சும்மாவே ரொம்ப பேச மாட்டேன். இந்த காதலுக்கு மரியாதையை படத்துல ஹலோ, ஹலோ -ன்னு சார்லியும், விஜயும் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து ஷாலினி கிட்டே சொல்வாங்களே, கிட்ட தட்ட அவங்களை மாதிரி தான் நான். புதுசா யாரவாது நேர்ல உட்கார்ந்தா என்ன பேசறதுன்னு தெரியாம முழி பிதிங்கிடும். அதுவும் போன்லே பேசுறதுனா நல்ல இருகீங்களான்னு கேட்பதை தவிர அடுத்தது என்ன பேசணும்னு தோணாது. என்னோட தாட் ப்ரோசெச்ஸ் ரொம்ப ஸ்லோ. யாரவது பொறி வெச்சு பேசினாக் கூட, உக்காந்து மெதுவா யோசிச்சா தான் ஓரளவுக்கு என்ன சொல்றாங்கன்னு புரியும். அட இதுக்கு ஏன் சுத்தி வளைச்சிட்டு, சிம்ப்ளா தமிழிலே டுயுப் லைட்டுன்னு சொல்லேன்னு சொல்றீங்களா. இப்ப என்ன என்ன சொல்ல வரேன்னா, எதுவும் மேட்டர் இல்லாம சும்மா ஒரு அரைமணி நேரம் நம்மளால ரம்பம் போட முடியாது. (மேட்டர் இல்லாம எழுதுவது வேறு விஷயம்) அதே நேரத்துல எதோ ஒரு முக்கிய காரணத்திற்க்காக பேசணும்னு இருந்தா, என் கோபம் ஈகோ எல்லாத்தையும் கழட்டி வெச்சிட்டு வருஷக் கணக்கா பேசாதவங்க கிட்டே கூட போனை போட்டு பேசுவேன். என்னவோடா மாதவா, உன்னை உன்னாலேயே புரிஞ்சிக்க முடியலியே என்று அப்புறமா உட்கார்ந்து சிலாகித்த நேரங்கள் அதிகம்.

இன்னொரு டைப் ஆளுங்க இருக்காங்க. இவங்க வஞ்சப் புகழ்ச்சி அணியில் பெரிய ஆளுங்க. வஞ்சப் புகழ்ச்சி அணி என்றால் தெரியாதவர்களுக்காக அடுத்த இரு வரிகள். ஒன்றை புகழ்வது போல் பழித்தல், ஒன்ற பழிப்பது போல் புகழ்தல். இதை முதலில் ஆரம்பித்து வைத்தது ஓவையார் அவர்கள் என்று நினைக்கிறேன்.  அதியமான் பத்தி இன்னொரு மன்னர் கிட்டே சொன்னாங்கனு நினைக்கிறேன். அந்த மன்னன் பெயர் சரியா ஞாபகம் இல்லை. மேலும், இந்த டைப் ஆளுங்க பற்றி நான் உதராணம் குடுத்தா நல்லா மாட்டிப்பேன் என்பதால் அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இதெல்லாம் விட வேற ஒரு டைப் ஆளுங்க இருக்காங்க. திடீர்னு மாசக் கணக்குல பதிவு எதுவும் எழுத மாட்டாங்க. திடீர்னு ஒரு நாள் எழுத ஆரம்பித்த பின்னாடி, பதிவு எழுதுறேன்னு சொல்லிட்டு கண்ணா பிண்ணான்னு எதையாவது எழுதிட்டு இருப்பானுங்க. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னு தெரியலே. உங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமான டைப் ஆளுங்க தெரிஞ்ச சொல்லுங்க, இல்லாட்டி வேற எதவாது சொல்லலும்னாலும் சொல்லிட்டு போங்க.





No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...