Saturday, September 3, 2011

கூட்டாஞ்சோறு - Sep 03, 2011

நாட்டு நடப்பு:

இன்னும் சில வாரங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களின் விநியோகம் ஆரம்பித்து விட இருக்கிறார்கள். இது உண்மையிலேயே ஏழை எளியவர்களுக்கு மட்டும் சென்றடைந்தால் நல்லது தான். மன்னன் படத்தில் கவுண்டமணி, 'செயினையும், மோதிரத்தையும் உள்ளே வாங்கி வெளியே வித்துர வேண்டியதுதான்' என்று சொல்வது போல, பல இடங்களில் வசதி படைத்தவர்களும் இந்த ஆட்டத்தில் நுழைந்து வாங்கிய பொருட்களை வெளியே பாதி விலைக்கு விற்று விடுகிறார்கள். அரசின் கேபிள் திட்டமும் அமலுக்கு வந்துவிட்டது, 150 முதல் 200 ருபாய் வரைக் கட்டிவந்த கேபிள் சந்தா 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்பால் ஏற்ப்படும் நஷ்டம், கேபிள் ஆப்பரேட்டர்களுக்கா இல்லை தமிழக அரசுக்கா என்று புரியவில்லை.

காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் ஏன் இப்போது சமீபத்தில் தாத்தப் பாட்டி தினம் என்று கூட மதுரையில் கொண்டாடி இருக்கிறார்கள். இது போன்ற வரிசையில் சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம் என்று ஒரு தினம் இருப்பதாக இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதை முன்னிட்டு மெரீனா கடற்கரையில் மாணவர்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றினர். உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையை பாதுகாப்பது நல்லது தான்.  நிறைய குப்பைதொட்டிகளை நிறுவினால் நன்றாக இருக்கும். இந்த அவசர உலகில், குப்பைத் தொட்டி அருகில் இருந்தாலே போய் போட சோம்பேறித்தனம் கொண்ட நம் மக்கள், குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறது என்று தேடித் போய் போடப் போவதில்லை. எப்படியோ மெரீனா சுத்தமானால் சரி.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே கிழே கண்டெடுத்த பையில் இருந்த பத்தாயிரம் ரூபாயை நான்கு நண்பர்கள், போலீசார் வசம் ஒப்படைத்தார்கள் என்று செய்தியில் படித்தேன். இந்தக் காலத்தில் இவ்வளவு நேர்மை இருப்பது, ஒரு பெரிய விஷயம். அதுவும் யாராவது ஒருவர் கண்டெடுத்து ஒப்படைத்து இருந்தால் கூட பரவாயில்லை, நான்கு நண்பர்களும் சேர்ந்து ஒரு மனதாக இந்த காரியத்தை செய்திருப்பது அவர்கள் நல்ல மனதை காட்டுகிறது. இந்த செய்தியை படித்ததும், ஒவ்வையின் மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

அறிவியல் பிட்ஸ்:

சும்மா கார்லே பறக்குறானே என்று நிஜமாகவே காரில் பறக்கும் ஒருவரைப் பற்றிச் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஆம் டெர்ராபுஜியா (Terrafugia) என்ற அமெரிக்க கம்பெனி அடுத்த வருடத்தில் இந்த கார் சந்தைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. விலை ருபாய் ஒரு கோடிக்கு மேல் எகிறுகிறது. அதற்குள் நூறு பேருக்கு மேல் இந்தக் காரை வாங்க முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதை எந்த ஒரு நேர் சாலையிலும் ஒட்டி டேக் ஆப் செய்ய முடியும். அதே போல தரை இறங்கியவுடன் பதினைந்து நொடிகளுக்குள் இறக்கைகளை மடக்கிவிடலாம். விண்ணில் பறக்கும் போது அதிகபட்சம் மணிக்கு 115 மைல்கள் வேகத்திலும், தரையில் ஓடும் போது அதிகபட்சம் 62 மைல்கள் வேகத்திலும் செல்லக்கூடியது. இதற்கு பெட்ரோல் சாதாரண பெட்ரோல் பங்குகளில் நிரப்பிக் கொள்ளலாம். இதை ஓட்ட சிறு விமானங்களை ஓட்டத் தகுதி பெற்ற லைசென்ஸ் தேவை. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பறக்கும் காரை பாருங்கள்.


சினி பட்டறை:


சிம்பு தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாக கூறும் ரகத்தை சேர்ந்தவர். மங்காத்தா படத்தை முதல் நான் முதல் ஷோ சென்னை சத்யம் திரைஅரங்கில் சென்று விசிலடித்துப் பார்த்தாராம். பார்த்துவிட்டு வந்தவுடன் தன் பேஸ்புக் இணையதளத்தில் 'தல படத்தில் பணத்தை மட்டும் கொள்ளை அடிக்கவில்லை, மொத்த படத்தையும் ஆக்கிரமித்து எங்கள் மனதை கொள்ளை அடித்துவிட்டார், தல டா, மங்காத்தா டா' என்று குறிபிட்டிருக்கிறார்.


'த்ரீ இடியட்ஸ்' தமிழ் ரீமேக்கான நண்பன் திரைப்படத்தை, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று நாயகர்களை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இவ்வளவு பெரிய இயக்குனர் ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தது பெரிய விஷயம் தான். எந்திரன் படப்பிடிப்பின் டென்ஷனுக்கு இடையே 'த்ரீ இடியட்ஸ்' பார்த்து மிகவும் பிடித்து போனாதால் இதற்கு சம்மதித்தாராம். படம் ரஷ் பார்த்தேன் சூப்பரா வந்திருக்கு என்கிறார். நாங்களும் பார்க்க காத்திருக்கிறோம் சார். இங்கே சில நண்பன் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்பட்டங்கள் காணலாம்.




கருத்து கந்தசாமி:

கடவுள் தான் நமக்கு உறவினர்களை கொடுத்தார்.
நன்றி கடவுளே, எங்கள் நண்பர்களை நாங்களே தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.

ரசித்த வீடியோ:




8 comments:

Yaathoramani.blogspot.com said...

பறக்கும் கார் குறித்த வீடியோவும்
ரசித்த வீடியோவும் மிக மிக அருமை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
நாட்டு நடப்பும் சினிமாக் குறித்த செய்திகளும்
மிகவும் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Narayanan Narasingam said...

//@Ramani said...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி ஐயா.

மகேந்திரன் said...

அழகா கதம்பம் மாதிரி தொகுத்திருக்கீங்க நண்பரே.

மகேந்திரன் said...

தமிழ்மணம் 2

Narayanan Narasingam said...

// மகேந்திரன் said...அழகா கதம்பம் மாதிரி தொகுத்திருக்கீங்க நண்பரே.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.

Anonymous said...

kalakitta ma

vijaya said...

good job

vijaya said...

sweet memories

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...